![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
பெருகி வரும் கதிர்வீச்சால் ஆரோக்கியத்திற்கு ஆபத்துசென்னை... ஜனவரி...31 விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் சராசரி வாழ்க்கையில் சுமைகளைக் குறைத்து சுகங்களைக் கொண்டு வந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும் பல விஷயங்களையும் அது கொண்டு வரத்தான் செய்கிறது. குறிப்பாக கதிர்வீச்சால் மனித ஆரோக்கியத்திற்கு நாள்தோறும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இந்தியாவின் பிரபல மருத்துவர்களில் ஒருவரான அவிநாஷ் சி.அகர்வால் தன்னுடைய சமீபத்திய புத்தகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். வல்லரசு நாடுகள் அணுக்கழிவுகளை உலகின் பல்வேறு கடல்களில் தொடர்ந்து கொட்டிவருவது சுற்றுப்புற சூழலை ஏற்கனவே பெருமளவில் மாசுபடுத்திவிட்டது. ஆனால் புதியதாக தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஷயம், செல்லுலர் தொலைபேசிகள் மற்றும், காட்லஸ் தொலைபேசிகளால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்து தான். இத்தகைய தொலைபேசிகளுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்யும் போது வெளிப்படும் ஒருவித கதிர்வீச்சு மூளையிலும், கழுத்துப் பகுதியிலும் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. கதிர் வீச்சளவு
|