TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

தெற்காசியாவில் பெருகிவரும் எய்ட்ஸ்

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எய்ட்ஸ் நோய் கவலை தரும் விதத்தில் அபாயகரமான அளவில் பரவி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தெற் காசியா உயிர்க் கொல்லி நோயான இந்த எய்ட்ஸ் என்னும் டைம் பாம்மின் மீது அமர்ந்து கொண்டிருப்பதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கை செய்கிறது.

கூலித் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர், எல்லைகளைத் தாண்டி பிழைப்புக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லுவோர் இந்த எய்ட்ஸ் நோயை பரப்புபவர்களாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மியான்மாரில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரும், பங்களாதேஷில் 20 ஆயிரம் பேரும், நேப்பாளத்தில் 15 பேரும் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் திருமணமாகும் வயது தள்ளிப்போவதும், எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு ஒரு காரணியாக அமைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. போதைப் பொருள் பழக்கம் இந்திய நேப்பாள எல்லையிலும், இந்திய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எல்லைகளில் தொய்வின்றி தொடர்ந்து பெருகி வருவது நிலைமையை மிகவும் அபாயகரமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் பணியாற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தடுக்கும் வழிகள்

எய்ட்ஸ் நோய் பரவி வருவதை தடுக்கும் பணியில் அரசின் செயல்பாடுகள் மட்டும் போதுமானது அல்ல என்றும், இப்பணியில் தொண்டு நிறுவனங்கள் பெரும் பங்கு ஆற்றவேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த அபாயத்தை சமாளிப்பதற்கு சட்டரீதியாக சாத்தியமாகக்கூடிய, ஆக்கபூர்வமான அணுகுமுறையைஅரசு கடைபிடிக்கவேண்டும் என்று சமூக ஊழியர்கள் கருதுகின்றனர். குறிப்பாக நேப்பாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து ஆண்டுதோறும் இந்தியாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது முற்றிலுமாக தடுக்கப்படுவது, நிலைமையை ஓரளவாவது கட்டுக்குள் கொண்டுவர உதவும் என்று கருதப்படுகிறது.

ஆணுறைகளை உபயோகிக்கும்படி விடுதிகளுக்கு செல்லும் ஆடவர்கள் வற்புறுத்தப்படுவதும், இது குறித்த பிரச்சாரம் சிவப்பு விளக்கு பகுதிகளில் உள்ள பெண்களிடையே செய்யப்படுவதும் மிகவும் அவசியமாகும் என்றும் வல்லுநர்கள் சொல்லும் மற்றொரு வழியாகும்.

பிரென்ச் உதவி

இந்தியாவில் எய்ட்ஸ் குறித்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட பிரான்சு நாட்டின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு விருப்பம் தெரிவித்துள்ளது. 1983-ம் ஆண்டில் எய்ட்ஸ் கிருமியை கண்டுபிடித்த மூன்று ஆராய்ச்சியாளர்களை ஒருவரான பிரான்சு நாட்டு பேராசிரியர் திருமதி. பிரான்கோயிஸ் பாரே சினோசிதலைமையிலான இந்த நான்கு உறுப்பினர் விஞ்ஞானிகள் குழு இந்த வாரம் இந்தியா வரயிருக்கிறது.

எய்ட்ஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளில் பாரத விஞ்ஞானிகளுடன் கூட்டாக இக்குழு பணிபுரியவிருக்கிறது.

Top