TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

உல்ஃபா தீவிரவாதிகளுக்கு டாட்டா நிறுவனம் நிதி உதவி

சென்னை... அக்டோபர்...10

அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான உல்ஃபாவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாட்டா டீ நிறுவனம் நிதி உதவி அளித்து வந்தது, தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வடகிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் உல்ஃபாவிற்கு செய்யப்பட்டு வந்துள்ள இந்த நிதி உதவி பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. உல்ஃபா தவிர போடோ தீவிரவாதிகளுக்கும் டாட்டா டீ நிறுவனம் நிதி உதவி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், அவருடன் இருந்த மற்ற 2 பெண்களையும் மும்பை போலீசார் கைது செய்த போது தான் உல்ஃபாவிற்கு டாட்டா டீ நிறுவனம் நிதி உதவி அளித்து வந்தது தெரியவந்தது. உல்ஃபா தீவிரவாதிகளுக்கு இந்தியா முழுவதிலும் பல்வேறு நகரங்களில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காகவே அஸ்ஸாம் மாநிலத்தில் மருத்துவ உதவி திட்டம் ஒன்றை டாட்டா டீ நிறுவனம் துவக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் அஸ்ஸாமில் உள்ள டீ நிறுவனங்கள் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 90-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இந்த நிறுவனங்களிடமிருந்து கட்டாயமாக நிதி வசூல் செய்ய உல்ஃபா தீவிரவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் டீ நிறுவனங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் டாட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கடத்தப்பட்டும், வேறு சிலர் கொலை செய்யப்படவுமான சூழ்நிலை உருவானதால் டாட்டா டீ நிறுவனம் உட்பட அநேகமாக அனைத்து டீ நிறுவனங்களும் உல்ஃபாவிற்கு கப்பம் கட்டத்துவங்கிவிட்டன.

உல்ஃபா மற்றும் போடோ தீவிரவாதிகளால் கடுமையான பிரச் சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் மகந்தா அரசு இந்த விஷயத்தில் உ றுதியான நடவடிக்கையை மேற்கொள்ள துவங்கிவிட்டது. டாட்டா டீ நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் தேச துரோக குற்றம் சா ட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் காவல்து றை டாட்டா டீ உட்பட அனைத்து டீ நிறுவனங்களின் மீதும் ஆக்ரோ ஷமான போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

பழி வாங்குகிறார் மகந்தா

1990-ம் ஆண்டு அன்றைய அஸ்ஸாம் கண பரிஷத் அமைச்சரவை மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. பிரஃபல்ல குமார் மகந்தா அப்போது முதலமைச்சராக இருந்தார். டீ நிறுவனங்களின் நிர்பந்தத்தாலயே மகந்தா அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கருதப்பட்டது. எனவே தற்போது தனக்கொரு வாய்ப்பு கிடைத்திருப்பதால் மகந்தா டீ நிறுவனங்களை பழிவாங்கத்துவங்கியிருப்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர். மும்பையில் கைது செய்யப்பட்டவர் உல்ஃபா அமைப்பின் கலாச்சார பிரிவு செயலாளர். இந்த பெண்மணி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மும்பையில் மிக நவீன மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவரது பிரசவத்திற்கான முழு செலவையும் டாட்டா டீ நிறுவனமே ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அஸ்ஸாமில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக டாட்டா டீ நிறுவனம் வகுத்துள்ள திட்டத்தில் பிரசவம் போன்றவற்றிற்கு பிரத்யேக திட்டங்கள் இல்லை. எனவே இது வெளிப்படையாக தீவிரவாதிகளுக்கு உதவுவது அல்லாமல் வேறென்ன என்று மகந்தா வினவுகிறார்.

சி.பி.ஐ.விசாரணை

இதனிடையே கடந்த வார இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. டாட்டா டீ நிறுவனத்தை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற டாட்டா அதிபர் ரத்தன் டாட்டா, பாம்பே டையிங் அதிபர் நூஸ்லி வாடியா, அஸ்ஸாம் ஆளுநர், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற தொலைபேசி பேச்சுக்களின் விவரத்தை எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தது. டாட்டா டீ நிறுவனத்தை அஸ்ஸாம் அரசின் நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற பல்வேறு தரப்புகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இது தெளிவாக எடுத்துகாட்டுகிறது. இந்த விவகாரம் பெரும் அரசியல் புயலை கிளப்ப, நிலைமையை உணர்ந்த மத்திய அரசு இவர்களது தொலைபேசிகளை ஒட்டுகேட்டது யார் என்று கண்டுபிடிக்க சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் முதுகெலும்பான மத்திய உளவுத்துறை,
(இண்டலிஜன்ஸ் பீரோ) சொல்லித்தான் டாட்டா டீ நிறுவனம் உல்ஃபாவிற்கு நிதி உதவி செய்ததாக நூஸ்லி வாடியா கூறியிருக்கிறார்.

ஆனால் எது எப்படியானாலும் மகந்தா பிரச்சனையை அவ்வளவு சுலபத்தில் விடுபவராக இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவர் உறுதியாக கூறிவிட்டார்.

Top