![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
இந்திய ராணுவத்திற்கு அதிநவீன போர் விமானம் சென்னை... ஆகஸ்ட்...10 இந்திய விமான படைக்கு அதிநவீன போர் விமானம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். கண்ணுக்கு புலப்படாத, ராடாரின் பார்வையில் மண்ணைத்தூவும், "ஸ்டெல்த் பாமர்" எனப்படும் இந்த அதிநவீன போர் விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது பாரத பாதுகாப்பு அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகரான ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளார். இத்தகவலை, உலகின் பல்வேறு நாடுகளின் ராணுவ செய்திகளை, பாதுகாப்பு பற்றிய தகவல்களை வெளியிடும் புகழ்பெற்ற சஞ்சி கையான, "ஜேன்ஸ் இன்டர்நேஷனல் டிஃபன்ஸ் ரெவ்யூ" க்கு அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்துல்கலாம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே "லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட்" எனப்படும் இலகுரக போர்விமானத்தை இந்தியா 1983-ல் உருவாக்க திட்டமிட்டு, 95-ம் ஆண்டில் அது வெள்ளோட்டம் இடப்பட்டது. இந்த புதிய "ஸ்டெல்த் பாமர்" போர்விமானம் முந்தைய இலகுரக போர்விமானத்தின் நவீன படுத்தப்பட்ட வடிவமாக கருதப்படுகிறது. இதனை நடுத்தரரக போர்விமானம் என்று பாதுகாப்பு விஞ்ஞானிகள் பாகுபாடு செய்துள்ளனர். ரஷ்யாவின் உதவி
|