TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

புதுதில்லியில் கிரேக்க கலாச்சார கண்காட்சி

புதுதில்லி... ஆகஸ்ட்...19

பண்டைய கிரேக்க நாகரீகத்தின் கலாச்சார மேன்மைகளை எடுத்துக்கூறும் அற்புதமான கண்காட்சி ஒன்றை புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், கிரேக்கர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய பலபொருட்களும், கலை வண்ணம் கொண்ட பொருட்களும், ஆயுதங்களும், நகைகளும், உலோகப்பாத்திரங்களும், நாணயங்களும், அபூர்வமாக கிடைக்கும் கலை பொருட்களும், தினசரி வாழ்க்கையில் பண்டைக்காலம் தொட்டு கிரேக்கர்கள் பயன்படுத்திவரும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

செம்புகாலத்திலிருந்து, மாவீரன் அலெக்சாண்டருக்கு பிந்திய கிரேக்க சமூக வாழ்வின் பல்வேறு காலகட்டங்களை எடுத்து காட்டுவதாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து அவருக்கு பிந்தய இரண்டு நூற்றாண்டுகள் வரை உள்ள காலகட்டத்தை சித்தரிக்கும் பல படைப்புகள், அந்த கால கட்டங்களின் பல்வேறு வாழ்நிலைகளை சித்தரிக்கும் பொருட்கள் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாமன்னன் அலெக்சாண்டரின் பளிங்கு தலையும், அப் ரோடைட் மற்றும் ஈராஸ் ஆகியோரின் தோற்றங்களும், அலெக்சாண்டரின் பிந்திய காலகட்டத்திற்கு முதல் பகுதியைச் சார்ந்த தங்க காதணிகளும், வில் அம்புகளும், கி.மு.500-ம் ஆண்டைச் சேர்ந்த செம்பினாலான தலைக்கவசமும் பார்ப்பவர் நெஞ்சங்களை பரவசமூட்டுவனவாக அமைந்துள்ளன.

இந்திய கலைகளுக்கு மேன்மை


இந்த கண்காட்சியில் மாமன்னன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தது, பிரமாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அலெக்சாண்டர் தன்னுடன் கிரேக்க சிற்பக்கலைஞர்களையும் உடனழைத்து வந்துள்ளார். அவர்களது வருகை இந்திய கலைகளையும், கலாச்சாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. இதனை கி.பி. முதல் நூற்றாண்டில் உருவான காந்தாரக்கலை வடிவங்களில் நம்மால் தெளிவாக கண்டுகொள்ள முடிகிறது.

கிரேக்க படையெடுப்பு இந்திய கலைகளுக்கு மெருகேற்றியதையும், மேன்மை சேர்த்ததையும், நம்மால் மிகவும் துல்லியமாக இந்த கண்காட்சியிலிருந்து உணர்ந்து கொள்ளமுடிகிறது.

இந்த கண்காட்சிக்கு சென்று திரும்புவோர், மனித குல வரலாற்றில் என்றென்றும் தனக்கென்று ஒரு தனியிடத்தை பெற்றிருக்கும், கிரேக்க நாகரீகத்தைப்பற்றிய பல தகவல்களை எளிமையான முறையில் அறிந்து கொண்டு திரும்பினர் என்று சொன் னால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

இந்தியர்கள் தங்கள் சுதந்திரத்தின பொன்விழாவை கொண்டாடு ம் வேளையில், இதுபோன்றதொரு கண்காட்சி நாட்டின் தலைநக ரில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

அடுத்த மாதம் 15-ந் தேதி வரை இந்த கண்காட்சி புதுதில்லியில் ந டைபெறுகிறது. இந்த கண்காட்சி தேசிய அருங்காட்சியகமும், கிரேக்க அரசின் கலாச்சார அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

Top